வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி முத்து அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாவளி விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசித்தனர்.