திருச்சி:திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்துவது 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்துார் முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் தங்கத்தேர் இழுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவிலில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை சுத்தப்படுத்தி மின் விளக்குகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.