மேற்கு வங்கத்தில் காளி பூஜை கொண்டாட்டம்: பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2021 12:11
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் தீபாவளி மற்றும் காளி பூஜை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேற்கு வங்கத்தில் தீபாவளி திருநாள் அன்று காளி பூஜையும் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கோல்கட்டாவில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் காளி பூஜை நடந்தது. இதில், கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு துறை பிரமுகர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில்களில் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் மக்களுக்கு தீபாவளி மற்றும் காளி பூஜை வாழ்த்துக்களை தெரிவித்தனர். கோல்கட்டாவின் புறநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தக்ஷினேஷ்வர் கோவிலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.