கசவனம்பட்டி கோயிலில் நவ.,8ல் குரு பூஜை: நவ., 7ல் தீர்த்தாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2021 01:11
கன்னிவாடி: கசவனம்பட்டி கோயில் குருபூஜை விழா, துவங்குகிறது. கன்னிவாடி அருகே கசவனம்பட்டி யில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்த ஆண்டிற்கான குருபூஜை நவ. 8ல் நடக்க உள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், காப்புகட்டி விரதம் துவக்கியுள்ளனர். சிவனூரணி, திருமலைக்கேணி திருமூர்த்தி சுருளி காசி சதுரகிரி ராமேஸ்வரம் புனித நீர் எடுத்து வரப்படும். தீர்த்த, பால் கலசங்களுடன், ஊர் விளையாடல் நடக்கும். நவ. 7 பகல் 2:30 மணி முதல், தொடர் தீர்த்தாபிஷேகம் நடைபெறும். மகா யாக தீர்த்தம், 108 படி பால் அபிஷேகத்துடன் குருபூஜை நடக்கும். அன்னதான கொடியேற்றத்துடன், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடக்கும். மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.