பதிவு செய்த நாள்
05
நவ
2021
03:11
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் நேற்று (4ம் தேதி) தீபாவளி சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. ஸ்வாமிகளுக்கு புதிய வஸ்திரங்கள், அம்மனுக்கு புதிய பட்டுப் புடவை சாத்தப்பட்டு மூன்று ஸ்வாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பக்தர்களுக்கு, இனிப்புகள் மற்றும் நிவேதினம் செய்த பலகாரங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைய பூஜை இறைப் பணியில் சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர். திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கோயில் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.