Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : சுகமான சூழல் உருவாகும் மகரம் :  செல்வ வளம் பெருகும் மகரம் : செல்வ வளம் பெருகும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுசு: மன உறுதி கூடும்
எழுத்தின் அளவு:
தனுசு: மன உறுதி கூடும்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
04:11


மூலம்: கெடுப்பது சோர்வு

தற்போது நடைபெற உள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். தனுசு ராசிக்கு அதிபதியான குரு தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத விதத்தில் கடும் அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். ராசி அதிபதியாக குருவையும், நட்சத்திர அதிபதியாக கேதுவையும் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன் முயற்சியால் வெற்றி காணும் வலிமை கூடும்.

நிதி : பொருளாதார ரீதியாக சேமிப்பில் சிரமம் கண்டாலும் அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பூர்வீக சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயராவிட்டாலும் கையிருப்பு என்பது கரையாது. நிலுவையில் உள்ள பாக்கித்தொகைள் வசூல் ஆகாமல் இழுபறியைத் தரும். வீடு, வண்டி, வாகனம் வாங்க முயற்சிப்போர் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம்.

குடும்பம் : உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும் போது வாழ்க்கைத்துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட பிரச்னைகள் விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிவார்கள்.

கல்வி : மாணவர்கள் சிறிது சிரமத்தினை சந்திப்பார்கள். ஏழரைச் சனியால் ஞாபக மறதித் தொந்தரவிற்கு ஆளானாலும், குரு மூன்றில் அமர்வதால் எழுத்து வன்மை அதிகரிக்கக் காண்பார்கள். வேகமாக எழுதும் திறன் உண்டாகும் என்பதால் அடிக்கடி பாடங்களை எழுதிப் பார்ப்பதை சவுகரியமாக உணர்வீர்கள். மொழிப்பாடங்கள், கலைப்பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் கண்டு வருவார்கள். கணிதம் உள்ளிட்ட அறிவியல் பிரிவு மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது.

பெண்கள் : இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனை வெற்றியைத் தரும். அதே நேரத்தில் அவருடன் வீணாக விவாதம் செய்து கருத்து வேறுபாடு கொள்வீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. பிறந்த வீட்டு தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி வந்து சேரும். அண்டை வீட்டாரால் அநாவசிய கலகங்கள் உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த இயலாமல் தடுமாற்றம் கொள்வார்கள்.

உடல்நிலை:  வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் லேசான சிரமம் காண்பீர்கள். நோய் எதிர்ப்புத் திறன் குறைவதால் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். கை கால் குடைச்சல், தோள் வலி, கழுத்துவலி போன்றவை அவ்வப்போது சிரமத்தினைத் தரக் கூடும்.

தொழில் : பணிரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். உடன் பணிபுரிவோர் செய்ய வேண்டிய பணிகளையும் நீங்களே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். பணிச்சுமை அதிகரிப்பது போல் உணர்வீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள், அரசுத்துறை பணியாளர்கள், வழக்கறிஞர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் ஆகியோர் ஏற்றம் காண்பார்கள். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் தொழில் நிலையில் அபிவிருத்தி கண்டு வந்தாலும்  பணப்பற்றாக்குறை இருப்பதை உணர்வார்கள். எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : ஞாயிறு தோறும் சரபேஸ்வர ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

பூராடம் :    “யவனர்போல் முயற்சி கொள்”
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் பட்டை தீட்ட தீட்டத்தான் வைரமும் மிளிரும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். குருவை ராசிநாதன் ஆகவும் சுக்ரனை நட்சத்திர நாதன் ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். ஏழரை சனியின் தாக்கம் ஒரு புறம், மூன்றில் குரு மறுபுறம், ஆறில் ராகு, 12ல் கேது என நான்கு திசைகளில் இருந்தும் சோதனைகள் காத்திருக்கின்றன. ஆயினும் அதிலும் ஒரு நல்ல நேரமாக இரண்டில் சனி ஆட்சி பலத்துடன் இருப்பதால் அவர் தரவிருக்கும் நற்பலன்களையும் அனுபவிக்க உள்ளீர்கள். அதே போல ராசி அதிபதியான குரு மூன்றில் அமர்வதால் உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை அடைவீர்கள். சுயநலத்திற்காக மட்டுமின்றி அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் தைரியமும், மன உறுதியும் அதிகரித்து எதையும் தாங்கும் இதயத்தினை பெறுவீர்கள்.

நிதி : சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடரும். வரவிற்கு முன்னர் செலவுகள் காத்திருப்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். அரசு தரப்பு வங்கிகள் மூலமாகக் கடன் பெறக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். சேமிப்பு கரையும் வாய்ப்புண்டு. டிசம்பர் மாத இறுதியில் அதிக செலவினைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.

குடும்பம் : குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக அதிகம் மெனக்கெடுவீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்புண்டு. உறவினர்களின் வருகையால் அதிக பொருட்செலவிற்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அவர்களை வெளியூர் அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஒரு சிலர் பணி விஷயமாக குடும்பத்தை விட்டு தனித்து வசிக்க வேண்டியிருக்கும்.

கல்வி : ஏழரை சனியின் தாக்கத்தால் மாணவர்கள் அதிக அளவிற்கு ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். ஞாபக மறதியை வெற்றி கொள்ள தீவிர பயிற்சி தேவை. நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்த்து பழகுவதால் தேர்வில் வேகமாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். ஆசிரியரிடம் நற்பெயர் வாங்க போராட வேண்டியிருக்கும்.

பெண்கள் : உறவினர்கள், சகோதரிகளால் பிரச்னைகள் தோன்றலாம். அவர்களோடு அதிகம் பேசாமல் அமைதி காப்பதால் புகுந்த வீட்டில் பிரச்னைகள் தோன்றாமல் இருக்கும். கணவரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. வெளியூர் பயணம் , விசேஷங்களுக்குச் செல்லும்போது நகைகள், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டாடைகள் முதலானவற்றில் அதிக கவனம் தேவை. பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது.

உடல்நிலை : ஆறில் நீசம் பெறும் ராகுவின் மீதிருந்து குருவின் பார்வை விலகுவதால் உடல்நலனில் சிறப்பு கவனம் என்பது அவசியமாகிறது. அற்பமான விஷயங்களுக்குக் கூட அதிக முக்கியத்துவம் அளிப்பதால் டென்ஷன் கூடுகிறது. சர்க்கரை வியாதிக்காரர்கள், ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் கூடுதல் கொழுப்பு உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தொழில் : அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தேவையற்ற இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். சுயதொழில் செய்வோர் பணியாட்களுக்காகக் காத்திராமல் தாங்களே எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருக்கும். விவசாயிகள், ஓட்டல் துறையில் பணி புரிபவர்கள், நகைக்கடை அதிபர்கள், கல்வித்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை சார்ந்தவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மார்ச் 21க்குப் பிறகு வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
     திண்ணியர் ஆகப் பெறின்.

உத்திராடம் 1ம் பாதம்: சிதையா நெஞ்சு கொள்

குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஏழரை சனியின் காலம் தொடர்வதால் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்பட்டு வருவீர்கள். ராசிநாதன் ஆக குருவையும் நட்சத்திர அதிபதி ஆக சூரியனையும் கொண்டிருக்கும் நீங்கள் மார்ச்  21 வரை 6 மற்றும் 12ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு, கேது இருவரையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பிரச்னைக்குரிய விவகாரங்களில் நேரத்தினை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. உங்களது எண்ணங்களை வார்த்தைகளாக பிரயோகிக்காது எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நன்மை தரும்.

நிதி : பணப்பரிவர்த்தனையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் வர்த்தகத்தின் போது ஒரு பொருளுக்கு இருமுறை பணம் செலுத்திவிட்டு அவதிப்படுவீர்கள். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். அடுத்த ஐந்து மாதமும் கொடுக்கல் வாங்கல் கூடாது. தங்க நகைகள் உட்பட் விலையுயர்ந்த பொருட்களை வீட்டினில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

குடும்பம் : தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தினர் தன்னை மதிப்பதில்லை என்ற ஆதங்கம் மனதில் உருவாகலாம். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது உறவினர்கள் வழியில் அநாவசிய கலகம் உண்டாகும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நிலுவையில் உள்ள பிதுர்கர்மா ஒன்றினை செய்து முடிக்க நேரம் கூடி வரும்.
கல்வி : மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. நண்பர்கள் செய்த தவறு வீண்பழியாக உங்கள் மீது வந்து சேரக்கூடும். ஆசிரியர்களிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும். எழுத்து வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பாடங்கள் சரிவர புரியாமல் தடுமாறுவீர்கள். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தனிப்பயிற்சி அவசியம். வணிகவியல், பொருளாதாரம், அக்கவுண்டன்சி மாணவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
பெண்கள் : வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி பணிச்சுமை கூடும். வேலைப்பளு கூடுவதால் உடலில் கடுமையான அசதியை உணர்வீர்கள். உங்கள் எண்ணங்களை தயங்காமல் கணவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். குடும்பப் பெரியவர்களின் செயல்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். பிறந்த வீட்டிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
 
உடல்நலம் : ராகுவின் மீதிருந்து குருவின் பார்வை விலகுவதால் உடல்நிலையில் லேசான சிரமம் காண்பீர்கள். அஜீரணக் கோளாறுகள் அவ்வப்போது உண்டாகி சிரமத்தைத் தரக்கூடும். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு மருந்து மாத்திரைகளால் ஒவ்வாமை உண்டாகி உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம்.

தொழில் : வியாபாரிகள் தொழில் நிலையில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும் எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய காத்திருக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோருக்கு கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். அலுவலகத்தில் பல்வேறு பணிகளையும் செய்ய வேண்டியிருக்கும். வேலைப்பளு கூடுவதால் சற்று சிரமத்தினை சந்திப்பீர்கள். வரும் ஐந்து மாத காலத்திற்கு அடுத்தவர்களுக்குக் கீழ் பணிபுரியும் நிலை இருந்து வரும். பணி ரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். லாபத்தைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்து தரும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் ஹயக்ரீவரை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
     இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar