Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: மன உறுதி கூடும் கும்பம் : குருபலம் உண்டாகும் கும்பம் : குருபலம் உண்டாகும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகரம் : செல்வ வளம் பெருகும்
எழுத்தின் அளவு:
மகரம் :  செல்வ வளம் பெருகும்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
04:11

உத்திராடம் 2, 3, 4ம் பாதம்: செல்வ வளம் பெருகும்
ஜென்ம குருவை விட இரண்டாம் வீட்டு குரு மிகுந்த நன்மையைச் செய்யும். எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுப்பதற்கு முன்னால் மிகவும் யோசிப்பீர்கள். அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதால் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக இருக்கும். நீங்கள் கூறும் நல்லாசி அடுத்தவர் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பதால் பலர் உங்கள் பேச்சினைக் கேட்க உங்களை நாடி வருவார்கள். சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் சனியை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு காண்பீர்கள். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும்.

நிதி : தன ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் முன்னேற்றம் தரும். தடையில்லாத பணவரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். பூர்வீக சொத்துக்களை உருமாற்றம் செய்துகொள்ள நேரம் கூடி வரும். பூமி லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்க நேரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் வாங்கும் அசையாச் சொத்துக்கள் உங்கள் பரம்பரைக்கே உதவும் வகையில் நிலைப்புத் தன்மை உடையதாக இருக்கும்.

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் அமரும் குருவினால் மனநிம்மதி காண்பீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து செயல்படுவீர்கள். வீட்டினில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரமிது. பல வருடங்களாக விட்டுப்போயிருந்த தகப்பனார் வழி உறவு ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும்.

கல்வி : சிறந்த அறிவுத்திறன் வளர்வதால் மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருந்து வரும். பொதுஅறிவினை வளர்த்துக் கொள்வதன் மூலம் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி காண்பீர்கள். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க விரும்புவோர்க்கு நேரம் சாதகமாக அமையும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை துறை சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டினை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவர் வழி உறவினர்களுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கணவரின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

உடல்நிலை: உடல்நிலை சீராக இருந்து வரும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களை இயக்கும் போதும் மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும் நிதானம் தேவை. தசைப்பிடிப்பு, சுளுக்கு, கழுத்துவலி, மூட்டுவலி ஆகியவற்றால் அவதியுறும் வாய்ப்புண்டு.

தொழில் : பணிரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். அரசுப் பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். வேலையில் நிலையில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் ஓரிடத்தில் நிலைபெறக் காண்பார்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகளை மிகுந்த லாவகத்தோடு கையாண்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் சீரான லாபத்தினை அடைந்து வருவார்கள். அதே நேரத்தில் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு கணக்கு வழக்குகளை கையாள வேண்டியது அவசியம். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர். மெக்கானிகல், தொழிற்சாலை சார்ந்த பணியாளார்கள் சிறப்பாக செயல்பட்டு பணிரீதியான முன்னேற்றத்தை அடைவார்கள்.
பரிகாரம் : புதன் தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
     புண்ணுடையர் கல்லாதவர்.

திருவோணம் : ரோதனம் தவிர்

சனியை ராசி அதிபதி ஆகவும் சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் குருவின் சாதகமான அமர்வு நிலையால் எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். இதுநாள் வரை மனதில் இருந்த பாரம் குறைந்திருப்பதாக உணர்வீர்கள். உங்களது நல்லெண்ணங்களும், சிந்தனைகளும் நல்லோர்தம் சபைதனில் தனி மதிப்பினைப் பெறும். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு தத்துவார்த்தமாக பதிலளித்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுடைய பேச்சு மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள்.

நிதி : குரு இரண்டில் அமர்வதால் சுப நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆயினும் ஏதேனும் ஒரு வழியில் பொருள் வரவு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும். செலவிற்குத் தகுந்தாற்போல் வரவும் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிதாக வண்டி. வாகனங்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற காத்திருப்போருக்கு நிலைமை சாதகமாக இருக்கும்.

குடும்பம் : உடன்பிறந்தோர் வழியில் உதவி கிடைக்கக் காண்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தரும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. சிறிது காலம் எந்த குழப்பமும் இன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்களை விட்டு ஒதுங்கியிருக்க விரும்புவீர்கள்.

கல்வி : இரண்டாம் வீட்டு குரு பொதுஅறிவினை வளர்த்துக்கொள்ள துணையிருப்பார். பள்ளி கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் உங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினை காண்பார்கள். ஆய்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை தொடரும். வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : பேச்சுத்திறமையால் பல்வேறு விஷயங்களை சாதிப்பீர்கள் என்றாலும் இடம் பொருள் அறிந்து பேச வேண்டியது அவசியம். தேவையற்ற இடங்களில் பேசும் பேச்சுக்கள் உங்கள் மதிப்பினைக் குறைத்துவிடும் என்பதை உணர்வது நல்லது. கணவரின் மனநிலையில் சிறப்பு கவனம் தேவை. பெற்றோர், உடன்பிறந்தோர் உங்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பார்கள். பொறுப்பு என்று வந்துவிட்டால் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

உடல்நிலை: தலைவலி, பசியின்மை, நரம்புத்தளர்ச்சி, கைகால் குடைச்சல், இடுப்பு வலி போன்ற பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம். இயற்கை மருத்துவ முறை நன்மை தரும். நேரத்திற்கு உணவருந்தினாலே உடல்நிலை மேம்படும். புதிய மருந்துகளால் உடலில் பக்க விளைவுகள் தோன்றக்கூடும். எச்சரிக்கை தேவை.

தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை பணியில் நன்மை பெற்றுத் தரும். நிரந்தர பணிக்காக காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். மெரைன் இன்ஜினியர்கள், மீனவர்கள், கடல் பயணம் சார்ந்த தொழில் செய்பவர்கள், கப்பல்படை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் பேச்சுத்திறனின் துணைகொண்டு தொழிலை அபிவிருத்தி செய்வர். புரோகிதர்கள், ஆலய அர்ச்சகர்கள், சமையல் கலைஞர்கள், எலக்ட்ரிஷியன், பிளம்பர் முதலானோர் ஓய்வின்றி உழைத்து நல்ல சம்பாத்யம் காண்பார்கள். பெரிய தொழிலதிபர்கள் தாங்கள் நினைத்ததை சாதிக்க சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : திங்கள் தோறும் பிட்சாடனரை வணங்கி வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
     கருமமே கட்டளைக் கல்.

அவிட்டம் 1, 2ம் பாதம் :    ஏறுபோல் நட

குருவின் இரண்டாம் இடத்து அமர்வு உங்கள் சொல்வன்மையை கூட்டுகிறது. எங்கே எப்படிப் பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை பொய்யாக்கும் விதமாக மனதில் வேறுவித எண்ணங்கள் இருந்தாலும் அதனை முகத்தில் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் பேசி சாதிப்பீர்கள். சனியை ராசிநாதன் ஆகவும் செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் பயமறியாதவர்கள். யாருக்கும் அஞ்சாமல் சொல்ல வேண்டிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தி தன் தரப்பு நியாயத்தை முன் வைத்து வாதாடுவீர்கள். தனக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவீர்கள். சாதுக்கள், சந்யாசிகளுடனான சந்திப்பு மனப்பக்குவத்தைப் பெற்றுத் தரும். ஒரு சில நேரத்தில் அமைதி காப்பதன் மூலமாகவும் வெற்றி பெற இயலும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள்.

நிதி : தன ஸ்தானத்தில் குருவின் அமர்வு சீரான பொருள்வரவினைத் தரும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வந்த நிதிப்பயன் இந்த நேரத்தில் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தனிப்பட்ட முறையில் உங்களது எதிர்காலம் கருதி புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். மியூச்சுவல் பண்ட், ஷேர் மார்க்கெட் ஆகியவற்றில் முதலீடு செய்ய ஏதுவான காலம் இதுவல்ல. அதே நேரத்தில் எல்ஐசி, போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு முதலானவை பயன்தரும் வகையில் அமையும்.

குடும்பம் : குடும்பத்தில் அமைதி நிலவி வரும். உறவினர்களில் நல்லவர் தீயவர்களை பிரித்து அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பீர்கள். பெரியவர்களுடன் வீண் விவாதம் செய்யாமல் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. அவர்களது மனமகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் கண்டிப்புடன் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வீர்கள்.

கல்வி : குருவின் அருளால் கல்வியில் முன்னேற்றம் காண ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அன்பினைப் பெறுவார்கள். அறிவியல் பாடங்களைப் புரிந்துகொள்ளும் திறன் கூடும். வரலாறு, பொருளாதாரம், மொழியியல் துறை மாணவர்கள் ஏற்றம் பெறுவார்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் அறிவினை மேம்படுத்திக்கொள்ள அஞ்சல் வழியில் கல்வி பயில ஆர்வம் கொள்வார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் பணிச்சுமை கூடும். வீட்டிலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி பொறுப்புகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். ஓய்வின்றி உழைத்து வருவதால் உடல்நிலையில் அசதி தோன்றலாம். கணவரின் பணிகளுக்கு பக்கபலமாய் துணையிருப்பீர்கள். ஒரு சிலருக்கு பிறந்த வீட்டாரோடு வீண் மனஸ்தாபம் உருவாகக் கூடும். அண்டை வீட்டாரிடம் கவனத்துடன் பேச வேண்டியது அவசியம்.

உடல்நிலை: குருவின் அருளால் உடல்நிலை சீராக இருந்து வரும். உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றின் மூலமாக உடல்நலத்தைக் காப்பதில் அக்கறை கொள்வீர்கள். வண்டி வாகனங்களை இயக்கும்போதும் விளையாட்டின்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எலும்பு மஜ்ஜைகள் சார்ந்த பிரச்னைகள், கணுக்கால் வலி, மூட்டு வலி முதலானவை சிரமத்தைத் தரும். அறுவைசிகிச்சை செய்து கொள்ள காத்திருப்போருக்கு காலநேரம் சாதகமாக அமையும்.

தொழில் : கீழ்நிலைப் பணியாளர்களிடம் எச்சரிக்கை தேவை. ஜீவன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும். அலுவலகத்தில் கண்டு வந்த நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொலைதுாரத்தில் பணிபுரிவோர் சொந்த ஊருக்கு அருகில் பணி இடமாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு கூடி வரும். அரசியல் தொண்டர்கள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை பணியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், காவல்துறையினர் ஏற்றம் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் பெருத்த லாபம் காண இயலாது போனாலும் நஷ்டம் உண்டாகாது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில், வண்டி வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவுப் பண்டங்கள் தயாரிப்பு போன்றவை நல்ல வளர்ச்சி அடையும்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த
     நன்மை பயக்கும் எனின்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar