விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஐப்பசி வெள்ளி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2021 04:11
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஐப்பசி வெள்ளி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஐப்பசி வெள்ளியை முன்னிட்டு, இன்று ( நவ.,05) விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.