பதிவு செய்த நாள்
05
நவ
2021
04:11
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
சூலூர் வட்டாரத்தில், கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில், அறுபடை முருகன் கோவில், சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலையில் மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. இக்கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை சிறப்பாக நடக்கும். சென்னியாண்டவர் கோவிலில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, இன்று காலை, 9:00 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 9 ம்தேதி இரவு, சூரசம்ஹார விழாவும், 10 ம்தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. இதேபோல், அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று விழா துவங்குகிறது.