சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி மற்றும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிக்கு கலச பூஜை, அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெறும் . திருவிழா நடைபெறும் பத்து நாட்களிலும் தினமும் இரவு 8:00 மணிக்கு பழனியாண்டவர் சுவாமி , கோயில் வளாகத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்காரம் நவ. 9 ம் தேதியும், திருக்கல்யாணம் நவ. 10 ம் தேதியும் சிறப்பாக நடைபெறும்.