பதிவு செய்த நாள்
07
நவ
2021
03:11
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில், கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், கோவில் பிரதான மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு காலை, மதியம், மாலை மற்றும் இரவு என நான்கு கால லட்சார்ச்சனை நடக்கிறது. முக்கிய நாளான வரும், 9ல் இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சிவசுப்பிரமணியர் புறப்பட்டு, பைபாஸ் ரோட்டில் உள்ள சுவாமி நிலத்தில் சூரசம்ஹார விழா நடக்கிறது. இதில், சூரபத்மனை சிவசுப்பிர மணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. 10ல், இடும்பன் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம், பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கவுள்ளது.