பதிவு செய்த நாள்
08
நவ
2021
01:11
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில், சூர சம்ஹார விழா நாளை நடக்கிறது.
சூலூர் வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களான, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், குமரன் கோட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி, சூலூர் சிவன் கோவில், சின்னியம்பாளையம் வேல் முருகன் கோவில், அரசூர் பரமசிவன் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. இக்கோவில்களில், கடந்த, 5 ம்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் ஆறு நாட்கள் விரதம் இருந்து பூஜையில் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். நாளை மாலை, அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹார விழா நடக்கிறது. நாளை மறுநாள் காலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.