திருப்பரங்குன்றம் மலை மீது நவ. 19 மஹா தீபம்: கொப்பரை தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2021 12:11
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் மலை மீது நவ., 19 மாலை 6:00 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை தயார் நிலையில் உள்ளது.சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மீது உச்சி பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே மஹா தீபம் ஏற்றப்படும். அதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி திரி, ஐந்து கிலோ சூடம் பயன்படுத்தப்படும்.காடா துணியால் திரி தயாரித்து, அதை நெய்யில் ஒரு நாள் ஊற வைப்பர். திரி தயாரிக்க திருவண்ணாமலையிலிருந்து நிபுணர்கள் வர உள்ளனர். மூன்று நாட்கள் தீபம் எரியும். தீபம் எற்றப்படும் கொப்பரை தற்போது கோயில் கம்பத்தடி மண்டபத்தில் தயாராகவுள்ளது.