Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிழாவில் கடை வைப்போர் நெகடிவ் ... குன்றத்து ஐயப்பன் கோயிலில் இருமுடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் இடத்திற்கு வாடகை பாக்கி; டாக்டரை வெளியேற்ற உயர்நீதி மன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2021
03:11

சென்னை : ஏழு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் வாடகை பாக்கி வைத்தவரை, கோவில் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோவில் உள்ளது. இதற்கு சொந்தமான இடத்தில், டாக்டர் தியாகராஜன் என்பவர் கிளினிக் நடத்துகிறார். அமல்படுத்தவில்லைவாடகை செலுத்த தவறியதால், குத்தகையை ரத்து செய்து வெளியேற்ற, 2013ல் நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்தார். வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தாலும், அதை அமல்படுத்தவில்லை.

இதற்கிடையில், வாடகை பாக்கி மற்றும் உயர்த்தப்பட்ட வாடகை என 3.56 லட்சம் ரூபாயை, கோவில் நிர்வாகத்திடம் டாக்டர் தியாகராஜன் செலுத்தினார்.மனு தாக்கல்அதேநேரத்தில், குத்தகை இடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை, 2021 செப்டம்பரில் கோவில் நிர்வாகம் எடுத்தது. அதற்காக போலீஸ் பாதுகாப்பும் கோரியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் டாக்டர் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், தன்னிச்சையாக வாடகையை உயர்த்தி, 2019 டிசம்பரில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இடத்தில் இருந்து வெளியேற்ற, போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2014 நவம்பரில் இருந்து ஏழு ஆண்டுகளாக, ஒரு ரூபாய் கூட வாடகை பாக்கி செலுத்தாமல், டாக்டர் தியாகராஜன் அனுபவித்து வந்துஉள்ளார்.

ஒரு மாதம் வாடகை பாக்கி என்றாலும், சொத்தின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்தால், குத்தகையை ரத்து செய்ய கோவில் நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. அதிகாரம்ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வலுக்கட்டாயமாக வெளியேற்ற கோவில் அதிகாரிகளுக்கு, சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி அகற்றிக் கொள்ளலாம். அதில், குறுக்கிட தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுவரை மனுதாரர் வெளியேற்றப்படவில்லை என்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை பாக்கியையும், சட்டப்படி வசூலித்து கொள்ளலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar