திருப்பதி கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வஸ்திர மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2021 11:11
ஸ்ரீரங்கம் : கைசிக ஏகாதசி முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வஸ்திர மரியாதை மற்றும் மங்கலப் பொருள்களை ஸ்ரீரங்கம் இணை ஆணையர் மாரிமுத்துவிடம், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள் , உற்ச்சவர் ஸ்ரீ நம்பெருமாள் , மூலவர் ஸ்ரீ தாயார், உற்ச்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம் ,அதன்படி இவ்வாண்டு இன்று (15.11.2021) கைசிக ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி திரு.ரமேஷ்பாபு புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து விடம் வழங்கினார் உடன் கோயில் உதவி ஆணையர் திரு கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் , உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.