திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப விழாவின் ஏழாம் நாள் தேரோட்டத்தையொட்டி, தேர் போல அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், உள்பிரஹாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.