திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா ஆறாம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.
கோயிலிலுக்குள் தனித்தனி படிச்சட்டங்களில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, சிவிலி நாயகர், திருஞான சம்பந்தர் எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து, புராண கதையை கோயில் ஓதுவார் கூறினார்.வழக்கமாக இந்நிகழ்ச்சியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்திய கிரீஸ்வரர், பிரியாவிடை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளி விழா நடக்கும். கொரோனா தடை உத்தரவால் நேற்று கோயிலுக்குள் நடந்தது.