Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் வளர்பிறை பிரதோஷ ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபதிருவிழா: பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’கோவிலில் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கோர்ட் தலையிடாது’
எழுத்தின் அளவு:
’கோவிலில் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கோர்ட் தலையிடாது’

பதிவு செய்த நாள்

17 நவ
2021
02:11

புதுடில்லி:திருமலை ஏழுமலையான் கோவில் வழிபாட்டில் முறைகேடு நடப்பதாக கூறிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ’கோவிலில் தேங்காய் உடைப்பது, ஆரத்தி காட்டுவதில் எல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக் கூறியது.

ஆந்திராவில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.அவற்றில் அபிஷேகம் சேவை உள்ளிட்ட சில வழிபாடுகள் ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக ஸ்ரீவாரி தாதா என்ற பக்தர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், ’சடங்குகள், வழிபாடுகளை நடத்துவது தேவஸ்தானத்தின் உரிமை. மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காதபோது நீதிமன்றம் அதில் தலையிட முடியாது’ என கூறி, அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அடுத்ததாக அவர் உச்ச நீதிமன்றத்தில் ’அப்பீல்’ மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே மனு விசாரணைக்கு வந்தபோது, தேவஸ்தானம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கலானது.அதில், ’கோவிலின் சேவைகள் மற்றும் உற்சவங்கள் புனித ராமானுஜாச்சாரியாரால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ’சடங்குகள் மிக நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சமய ஊழியர்கள் மற்றும் கோவில் பூஜாரிகளால் ஆகம விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:கோவிலில் பக்தர்களிடையே பாரபட்சம் காட்டுவது அல்லது நிர்வாக ரீதியிலான பிரச்னை போன்றவற்றில் வேண்டுமானால் நீதிமன்றம் தலையிடலாம்.மாறாக தினசரி வழிபாடுகள், அவற்றை நடத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. கடவுள் முன் தேங்காய் உடைப்பது எப்படி, ஆரத்தி நடத்துவது எப்படி என்பவை எல்லாம் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகள். இவை நீதிமன்றம் தலையிடக்கூடிய பிரச்னைகள் அல்ல. நிர்வாக பிரச்னைகள் தொடர்பாக மனுதாரருக்கு விளக்கம் தேவைப்பட்டால், எட்டு வாரங்களுக்குள் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar