Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் ... காளியம்மன் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்தோத்திரபாதம் யார் பாட வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2021
05:11

 சென்னை : காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், மோகினி அலங்கார நிகழ்ச்சியின் போது, ஸ்தோத்திரபாதம் பாட தென்கலை ஸ்தோத்திரபாத கோஷ்டியை அனுமதிக்க கோரிய மனு மீது, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் ரங்கநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:நான் தென்கலை பிரிவைச் சேர்ந்தவன்; சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில், மோகினி அலங்கார நிகழ்ச்சி நடக்கும். அப்போது, தென்கலை ஸ்தோத்திரபாத கோஷ்டியினர், ஸ்தோத்திரபாதம் பாடுவது, பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு, தத்தாச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஸ்தோத்திரபாதத்தை, தாங்கள் தான் பாட வேண்டும் என்கின்றனர்.எனவே, தென்கலையினர் ஸ்தோத்திரபாதம் பாட ஏற்பாடு செய்யும்படி, தேவராஜசாமி கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:உரிய ஆவணங்கள், தகவல்களுடன், 2018 மே மாதம் அனுப்பிய மனுக்களின் நகலை, இரண்டு வாரங்களுக்குள் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு, மனுதாரர் அனுப்ப வேண்டும்.அதை பெற்ற பின், மனுதாரர், கோவில் நிர்வாக அறங்காவலர் மற்றும் தத்தாதேசிகன் திருவம்சத்தார் சபா செயலருக்கு, விசாரணை தேதி குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அனைத்து தரப்பினரையும் கேட்டு, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, இந்த பிரச்னையில் ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் முடிவெடுக்க வேண்டும்.மூன்று மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar