Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ... திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் தலா 20 ஆயிரம் பேர் கிரிவலம் செல்ல அனுமதி திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று மாலை மஹா தீபம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: இன்று மாலை மஹா தீபம்

பதிவு செய்த நாள்

19 நவ
2021
06:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (நவ.,19) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும் பார்வதிக்கு, சிவபெருமான இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் நவம்பர் 10ம் தேதி, தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10வது நாளான இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும், பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம் எனவும் கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar