Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகாதீபம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கார்த்திகை தீபம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் கார்த்திகை தீபம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 நவ
2021
02:11

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவ மூர்த்தியான, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க கவச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 6:40 மணிக்கு, தீப கம்பத்தில், மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன்பின், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தீபத்தையொட்டி, ஏராளமான பொதுமக்கள், சுவாமியை தரிசித்தனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பட்டீஸ்வரர் சுவாமி, பச்சைநாயகி அம்மன், உற்சவர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கு, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை முடிந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்து, தீப கம்பத்தின் கீழே யாக வேள்வி நடந்தது. அதனைத் தொடர்ந்து, மாலை, 6:50 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு கோடி தீபம் காட்டப்பட்டது. பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில், கோவில் வளாகத்தில் உள்ள தீபகம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar