பதிவு செய்த நாள்
20
நவ
2021
02:11
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பட்டீஸ்வரர் சுவாமி, பச்சைநாயகி அம்மன், உற்சவர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கு, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை முடிந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்து, தீப கம்பத்தின் கீழே யாக வேள்வி நடந்தது. அதனைத் தொடர்ந்து, மாலை, 6:50 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு கோடி தீபம் காட்டப்பட்டது. பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில், கோவில் வளாகத்தில் உள்ள தீபகம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.