பதிவு செய்த நாள்
21
நவ
2021
04:11
திருவண்ணாமலை: தீபதிருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. இதில், சந்திரசேகரர் வண்ண மலர்களால் அலங்கரித்த பல்லக்கில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கமாக தை மாதத்தில் நடக்கும், திருவூடல் திருவிழா மற்றும் தீபவிழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், என ஆண்டுக்கு இரு முறை, அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டால், இந்த ஆண்டு, இன்று, 21ல் அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோவிலின், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.