பதிவு செய்த நாள்
21
நவ
2021
07:11
நாமக்கல்: நாமக்கல்லில், ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, முக்கிய விசேஷ நாட்களில், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதேபோல், ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. அதன்படி கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடந்தது. இதையடுத்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.