தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2021 07:11
தஞ்சாவூர்: கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. இதன்படி இன்று (22ம் தேதி) மாலை தஞ்சாவூர் பெரிய கோவிலிலுள்ள பிரகதீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவ லிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பிரகதீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.