Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சிலைகள் தண்ணீரால் சேதம் சாத்துார் காசிவிஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம் சாத்துார் காசிவிஸ்வநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் சிவன்கோயிலில் கார்த்திகை சோமவார வழிபாடு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் சிவன்கோயிலில் கார்த்திகை சோமவார வழிபாடு

பதிவு செய்த நாள்

23 நவ
2021
01:11

திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல் மேற்கு ரதவீதி சிவலிங்கேஸ்வரர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர் கோயிலில் சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மூலவர் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. முன்னதாக கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு, யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது.

கன்னிவாடி: கன்னிவாடி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயிலில் உலகநன்மைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று முதல் சோமவார சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்க சுவாமிக்கு திரவிய அபிேஷகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது. 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பி, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar