பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 6ம் தேதி வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2012 11:07
திருநெல்வேலி: பாளை.,அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 6ம் தேதி மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடக்கிறது. பாளை.,அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு வரும் 6ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. இதைமுன்னிட்டு அன்று காலையில் விசேஷ ஹோமங்களும், தொடர்ந்து திருமஞ்சனமும் நடக்கிறது. காலை 10 மணிக்கு கஜேந்திர மோட்ச படத்திறப்பும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அழகிய மன்னாரும்,ராஜகோபாலனும் கருட வாகனத்திலும், தயாரும், கிருஷ்ணரும் அன்ன வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 5ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் கலையரங்கில் கோபாலனது மகிமை தலைப்பில் கோபால்ஜி.,யின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. 6ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்ணவேலின் கிளாரினட் இசை நடக்கிறது. தொடர்ந்து "யசோதையின் மைந்தனும், குந்தியின் மைந்தனும் தலைப்பில் நெல்லை கண்ணன் சமய சொற்பொழிவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கைங்கர்ய சபா தலைவர் அய்யனார், செயலாளர் தெய்வநாயகன், பொருளாளர் பாலையா மற்றும் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.