Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோக மையத்தில் குருபவுர்ணமி விழா; ... சென்னை பக்தருக்கு கடவுள் உத்தரவு: சிவன்மலையில் பட்டு வேட்டி, துண்டு! சென்னை பக்தருக்கு கடவுள் உத்தரவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு இட்லி நிவேதனம் படைத்து பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
10:07

காஞ்சிபுரம்: வட்டார அளவில் வசிக்கும் மக்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப, கோவில்களில் வழிபாடு, நிவேதன முறை வேறுபடுகிறது. பெருமாள் கோவிலே என்றாலும், நிவேதனம் கோவிலுக்கு கோவில் மாறுபடுகிறது. ஸ்ரீரங்கத்தில், பெருமாளுக்கு தோசை நிவேதனம் செய்யப்படுகிறது. உப்பிலியப்பன் கோவிலில், உப்பில்லா பொருட்களால் நிவேதனம் நடக்கிறது. இந்த வகையில், வரும் 5 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், இட்லி நிவேதனம் நடக்கிறது.

சுக்கும், உளுந்தும்: மிளகு, சுக்கு, உளுந்து, போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும், இந்த இட்லிக்கு தனிச் சுவை உண்டு. தினமும் கோவில் மடப்பள்ளியில் தயாராகும் இரண்டு இட்லிகளில், ஒன்று பெருமாளுக்கும், மற்றொன்று தாயாருக்கும் நிவேதனம் செய்யப்படுகிறது. நிவேதனமான இரண்டு இட்லிகளில், ஒன்று பக்தர்களுக்கும், மற்றொன்று உபயதாரர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நிவேதனம்: வரதராஜப் பெருமாள் கோவிலில், தினமும் காலை 6.30 மணிக்கு, பெருமாளுக்கு கோவில் இட்லி, வெறும் சாதம், வெண்பொங்கல், போன்றவை நிவேதனம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு தயிர் சாதம், மாலை 6 மணிக்கு தோசை, வடை, சுண்டல், சர்க்கரை பொங்கல். இரவு 7 மணிக்கு, தயிர் சாதம் மற்றும் வெறும் சாதம். இரவு 8 மணிக்கு சர்க்கரை பொங்கல். மாலை தயாரிக்கப்படும் சர்க்கரை பொங்கலில், முழு அளவில் வெல்லம் சேர்க்கப்படுகிறது. இரவு தயாராகும் சர்க்கரை பொங்கலில், பாதி அளவு மட்டுமே வெல்லம் சேர்க்கின்றனர். இரவு தூங்க செல்லும்போது, அதிக வெல்லம் சேர்க்கக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. வழக்கமான நிவேதனம் தவிர, புளியோதரை, கேசரி, வெண்பொங்கல், மைசூர்பாகு போன்றவையும் நிவேதனத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மிளகாய்க்கு தடை: வரதராஜ பெருமாளுக்கு, தயார் செய்யப்படும் நிவேதனத்தில், மிளகாய் சேர்ப்பதில்லை. அதற்கு பதிலாக, மிளகு சேர்க்கின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், அக்னியிலிருந்து தோன்றியதால், அதிக சூடை தரும் மிளகாயை பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், துவரம் பருப்பு, வெந்தயம், மல்லி போன்றவையும் நிவேதன தயாரிப்பில் சேர்க்கப்படுவதில்லை.

ஐந்து கால பூஜை கோவிலில், பாஞ்சராத்ர முறைப்படி தினமும் ஐந்து கால பூஜை நடத்தப்படுகிறது. காலை, 6 மணி, நடை திறப்பு. காலை, 6.30 மணி, ஸ்ரீரங்கராஜ வீதியில், தேசிகர் சன்னிதி, கிணறு, செவிலிமேடு சாலைகிணறு ஆகியவற்றில் இருந்து எடுத்து வரப்படும் தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம். காலை, 10 மணி, அலங்காரம், நிவேதனம். மாலை, 6 மணி, புஷ்பம் சாத்தி, வடை, சுண்டல், நிவேதனம். இரவு, 7 மணி, திருவாராதனம். இரவு, 8 மணி, திருப்பிரசாதம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar