கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பவுர்ணமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2012 11:07
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* கோனூர் அருகே வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமிகள் கோயிலில், பவுர்ணமி பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.