அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதவல்லி அம்பாள் சமேத லிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம், 2 வது சோம வாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ சக்கர வடிவ, யாகசாலையில் பூஜை நடந்தது. அமுத லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.