சபரிமலை: சபரிமலையில் பாதுகாப்பு மற்றும் சேவை பணிகளுக்காக இரண்டாம் கட்ட போலீசார் நேற்று பொறுப்பேற்றனர்.
போலீஸ் தலைமயைிட கூடுதல் துணை ஐ.ஜீி. ஆர். ஆனந்த் சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் மூன்று டி.எஸ்.பி., ஒன்பது இன்ஸ்பெக்டர், 33 எஸ்.ஐ.க்கள், 220 போலீசார் என மொத்தம் 265 பேர் இரண்டாம் கட்டமாக பொறுப்பேற்றுள்ளனர். சன்னிதானம் நடைப்பந்தல் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர்களுக்கு பக்தர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவர்களுடன் தனிப்படை போலீசார், கமாண்டோக்கள், மத்திய அதிவிரைப்படையினர், தேசிய பேரழிவு மீட்புப்படையினர், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநில போலீசார் 300 பேர் பணியில் உள்ளனர்.