தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2021 06:12
தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக மங்களப் பொருள்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். இன்று பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.