பழநி: பழநி மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப்கார் சேவையின் டிக்கெட் விலையை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பழநி மலைக்கோயிலுக்கு சீசன் துவங்கியுள்ளதால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோயில் சென்றுவர படிப்பதை, ரோப்கார், வின்ச் சேவைகள் உள்ளன. இவற்றில் ரோப்கார் சேவையில் கொரோனா பரவலைத் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன் ரோப் கார் சேவையில் மலைக்கோயில் மேலே செல்லவும், கீழே வரவும் தலா ஒரு நபருக்கு ரூ.50. ரூ.15 ஆகிய இரு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின் கொரானா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் டிக்கெட்டுகள் மூலம் ரோப் கார், வின்ச் சேவைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டன. தற்போது நேரடியாக ரோப் கார் சேவை டிக்கெட்டுகள் ரோப்கார் நிலையத்தில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ரூ. 50 கான டிக்கெட் மட்டும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.15 டிக்கெட் வழங்கப்படுவதில்லை. இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். குழந்தைகள் ரோப்காரில் செல்ல அதிக விருப்பம் தெரிவிப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் ரூ. 15 காண டிக்கெட்டுகளை வழங்கி ரோப்கார் சேவையை அனுமதிக்க வேண்டுமென பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.