நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழாவும், மாத சிவராத்திரி விழாவும் நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.