காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி வேலைகள் செய்ய அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2021 03:12
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் திருப்பணிகள் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட திருப்பணி குழுவிற்கு அனுமதி மறுத்து ஹிந்துசமய அறநிலையத்துறை பாராமுகம் காட்டிவருகிறது.
உத்தமபாளையம் முல்லை பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில். இந்தக் கோயிலில் ராகு கேது தனித்தனி சன்னதியில் எழுந்தருளி காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது கடந்த 2020 ஜனவரி மாதம் புதிய திருப்பணி குழு அமைத்து ஹிந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. ஒய்வ பெற்ற வங்கி அதிகாரி எம். சண்முகம் தலைமையிலான குழு, பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே 60 சதவீதத்திற்கு மேற்பட்ட திருப்பணிகளை முடித்தது. . இன்னும் 40 சதவீத பணிகளை மீதமுள்ளை திருப்பள்ளி குழுவின் பதவி காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் - 2021 ஜனவரி மாதத்துடன் பதவி காலம் முடிவடைந்தது. திருப் பணிகளை முடித்து தர பதவி காலத்தை நீடித்து தருமாறு திருப்பணிக்குழு ஹிந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் எழுதியது. கடிதம் எழுதி 10 மாதங்களுக்கு மேலாகியும் ஹிந்து.சமய அறநிலைத்துறை பாராமுகம் காட்டிவருகிறது. இதனால் கோயில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நின்று போன திருப்பணியை மீண்டும் தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்கெனவே நியமிக்கப்பட்ட திருப்பணிக்குழலிற்கு அனுமதி தர ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.