Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர லிங்கம் தரிசன தடை: கோவில் முன் ... புத்தேரி சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு புத்தேரி சந்திர மவுலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி வேலைகள் செய்ய அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி வேலைகள் செய்ய அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2021
03:12

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் திருப்பணிகள் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட திருப்பணி குழுவிற்கு அனுமதி மறுத்து ஹிந்துசமய அறநிலையத்துறை பாராமுகம் காட்டிவருகிறது.

உத்தமபாளையம் முல்லை பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில். இந்தக் கோயிலில் ராகு கேது தனித்தனி சன்னதியில் எழுந்தருளி காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது கடந்த 2020 ஜனவரி மாதம் புதிய திருப்பணி குழு அமைத்து ஹிந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. ஒய்வ பெற்ற வங்கி அதிகாரி எம். சண்முகம் தலைமையிலான குழு, பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே 60 சதவீதத்திற்கு மேற்பட்ட திருப்பணிகளை முடித்தது. . இன்னும் 40 சதவீத பணிகளை மீதமுள்ளை திருப்பள்ளி குழுவின் பதவி காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் - 2021 ஜனவரி மாதத்துடன் பதவி காலம் முடிவடைந்தது. திருப் பணிகளை முடித்து தர பதவி காலத்தை நீடித்து தருமாறு திருப்பணிக்குழு ஹிந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் எழுதியது. கடிதம் எழுதி 10 மாதங்களுக்கு மேலாகியும் ஹிந்து.சமய அறநிலைத்துறை பாராமுகம் காட்டிவருகிறது. இதனால் கோயில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நின்று போன திருப்பணியை மீண்டும் தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்கெனவே நியமிக்கப்பட்ட திருப்பணிக்குழலிற்கு அனுமதி தர ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar