சின்னாளபட்டி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவன், நந்திக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.