Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பில் மாற்றம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்

04 டிச
2021
11:12

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.19 லட்சத்தில் அம்மன் சன்னதி பள்ளியறை படிகள், கல் பீடங்களுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிச.,16 முதல் 2022 ஜன.,13 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நாட்களில் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். உச்சிகால பூஜை முடிந்து மதியம் 12:00 மணிக்கு நடைசாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9:00 மணிக்கு பூஜை முடிந்து கோயில் நடைசாத்தப்படும். இந்நாட்களில் அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

எண்ணெய் காப்பு உற்ஸவம்: இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 19 வரை நடக்கிறது. இந்நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்மன் உற்ஸவ சன்னதியில் தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடக்கும். பின் அங்கிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருவார். டிச.,18 கோ ரதத்திலும், டிச.,19 கனக தண்டியலிலும் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். டிச.,20 திருவாதிரை அன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருவர்.

திருவெண்பா உற்ஸவம்: இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 20 வரை நுாறு கால் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி முன் நடக்கிறது. டிச.,20 பொன்னுாஞ்சல் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமி சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்ததும் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வருவர்.

ஆருத்ரா தரிசனம்: டிச.,19 இரவு முதல் டிச.,20 அதிகாலை வரை நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். இக்கோயிலில் மட்டும்தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜக்குரிய ஐந்து உற்ஸவ சிலைகள் உள்ளன. அபிஷேக பொருட்களை கோயில் உள்துறை அலுவலகத்தில் டிச.,19 இரவு 7:00 மணிக்குள் பக்தர்கள் வழங்கலாம் என நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar