Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம் கோயிலில் விழிப்புணர்வு ... விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

04 டிச
2021
02:12

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(04ம் தேதி) கங்காவதரண மகோத்சவ நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர்.  
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுாரில், ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நுாற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பக்தி நெறி தவறாதவர்.  ஒரு சமயம் ஐயாவாள் தன் தந்தையாருக்கு, நீத்தார் கடனைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக புரோகிதர்கள் சிலரை வரவழைத்தார். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும். அந்த நேரத்தில், ஐயாவாள் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர். நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் இந்த பாவம் நீங்கும் என கூறிச சென்றனர்.  ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.

அப்போது ஐயாவாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி (04ம் தேதி) அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும்  நீராடி மடத்துக்கு ஈரத்துணியோடு வந்து மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar