திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 5 கோயில்களுக்கு உணவு பாதுகாப்பு, தரங்கள் நிர்ணய ஆணையத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஹிந்து சமய அறநிலையத்துறை, தனியார் கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் தரமானதாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.
தரமானதாக இருந்தால் சுகாதாரமான பிரசாதம் (Blissful Hygienic Offering to God) என சான்றிதழ் வழங்கப்படுகிறது.அதன் படி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், பழநி மலைக்கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர், கொடைக்கானல் மாரியம்மன் உட்பட 5 கோயில்களில் படைக்கப்படும் பிரசாதம், அன்னதானம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து, இக்கோயில்களுக்கு (BHOG) தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில கோயில்களுக்கு சான்றிதழ் பெற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறினார்.