பதிவு செய்த நாள்
06
டிச
2021
10:12
நாமக்கல்: கார்த்திகை மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாமக்கல்லில், ஒரே கல்லால் ஆன, 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபி ேஷகம், ஆராதனை நடக்கும். அதேபோல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜை நடக்கிறது.
நேற்று கார்த்திகை மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், மஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் குளிர்காலத்தில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் முறையாக இரவு, 7:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.