புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவில் குரு பூர்ணிமா விழா நடந்தது.பிள்ளைச்சாவடி புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரே உள்ள சீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு பூர்ணிமா விழா நேற்று மாலை 6 மணிக்குத் துவங்கியது.6.30 மணிக்கு சத்ய நாராயண பூஜை, 7.45 மணிக்கு சாயிபாபா பல்லக்கு உற்சவம் நடந்தது. 8 மணிக்கு சுவாமிகளுக்கு ஆரத்தி நடந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகள் சாயிபாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.