Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை அண்ணாமலையார் மலை உச்சியில் சுவாமி  பாதத்திற்கு அபிஷேகம் அண்ணாமலையார் மலை உச்சியில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்

பதிவு செய்த நாள்

10 டிச
2021
11:12

சென்னை : சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி (ரோப் கார் ) சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
 
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி (ரோப் கார் ) அமைவிடத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் திரு.R.காந்தி ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருக்கோயிலுக்கான பெருந்திட்ட வரைவு (Master Plan) விளக்கப்படம் மூலம் விவாதிக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி அமைவிடத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விளக்கப்படம் மூலம் விவாதிக்கப்பட்டது.  குறிப்பாக பக்தர்கள் காத்திருப்பு கூடம், பொருட்கள் பாதுகாக்கும் அறை, கட்டணச்சீட்டு கூடம், குடிநீர், கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம், பூஜை பொருட்கள் விற்பனை நிலையம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ஏதுவாக கம்பிவட ஊர்தி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர் திரு. ஜெயராமன், திருக்கோயில் உதவி ஆணையர் திருமதி ஜெயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி)குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar