மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2012 11:07
தூத்துக்குடி : தூத்துக்குடி மீனாட்சிபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன்,ஸ்ரீசந்தன மாரியம்மன் கோயில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. தூத்துக்குடி மீனாட்சிபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீசந்தன மாரியம்மன் கோயில் 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.விழாவில் காலை 7 மணிக்கு மஹா கணபதி ஹோமம்,8 மணிக்கு துர்க்கா ஹோமம், 9 மணிக்கு சுதர்சன ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹீதி, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், 11.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், தொடர்ந்து அம்மனுக்கு வருஷாபிஷேகமும்,சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.