ஷீரடி: குருபூர்ணீமா திருவிழா நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு 4லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும், அதன்மூலம் ரூ. 4.14 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஷீரடி சாய்பாபா கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 3 நாட்கள் நடைபெற்ற குருபூர்ணிமா விழா, நேற்றுடன் முடிவடைந்துள்ளது. காணிக்கையாக, உண்டியலில் ரூ. 2.62 கோடியும், 723 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பெருமளவில் வந்ததால், வெளிநாட்டு கரன்சிகளும் அதிகளவில் வந்துள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 4.14 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.