Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக ... தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய சுவாமி தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

14 டிச
2021
01:12

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று(டிச.,14) அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பரமபத வாசலில் அருள்பாலித்தார். அதன்பிறகு அதிகாலை 4:45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். இரவு 9.00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar