பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ஆயிர வைசிய சபையின் முயற்சியால் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக பூஜை ஜூலை 2 ல் துவங்கியது. மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜையும் , ஜூலை 3 ல் காலை 9.30 மணிக்கு 2 ம்கால யாக பூஜையும் , மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாக பூஜையும் , ஜூலை 4 ல் காலை 9 மணிக்கு 4ம் கால யாகபூஜையும் , மாலை 5.30 மணிக்கு 5ம் கால யாகபூஜையும் நடந்தது. நேற்று (ஜூலை 5 ) ல் காலை 5.50 மணிக்கு 6ம் கால யாகபூஜையும் , காலை 8 மணிக்கு கோ பூஜையும் , 8.30 மணிக்கு கடம் புறப்பாடும் , காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. காலை 11 மணிக்கு மஹா அபிஷேகம் , 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.ஆயிர வைசிய சபை, ஆயிர வைசிய இளைஞர் சங்கம் , ஆயிர வைசிய இளைஞர் அன்புக்குழு, ஆயிர வைசிய இளைஞர் நற்பணி மன்றம் , காயத்ரி மகளிர் மன்றம் , கலைமகள் மகளிர் மன்றம், சதாசிவம் ஜூவல்லர்ஸ் சதாசிவம் செட்டியார், காயத்ரி மோட்டார்ஸ் வெங்கடேஷ், உஷா டிரேடர்ஸ் பாலகுமார் இளையான்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள்,ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.