பதிவு செய்த நாள்
16
டிச
2021
01:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து 2ம் நாளில் நம்பெருமாள், சவுரி கொண்டை, சந்திர சூரியனுடன், துரா, ரத்ன காது காப்பு, வைர அபயஹஸ்தம், மகாலலக்ஷ்மி பதக்கம், அடுக்கு பதக்கம், தங்க மணி சரம், ஒட்டியாணம், ஆகியதிருவாபரணங்கள் அணிந்து , ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் திருமாமணி மண்டபத்தில், எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் 2ம் நாளான நேற்று (டிச.,15) நம்பெருமாள் சவுரி கொண்டை, சந்திர சூரியனுடன், துரா, ரத்ன காது காப்பு, வைர அபயஹஸ்தம், மகாலலக்ஷ்மி பதக்கம், அடுக்கு பதக்கம், தங்க மணி சரம், ஒட்டியாணம், ஆகியதிருவாபரணங்கள் அணிந்து , ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் திருமாமணி மண்டபத்தில், எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.