ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள், தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று ஆர்.எஸ். மங்கலம் அரசாள வந்த அம்மன் கோவிலில், மூலவர்கள் அரசாள வந்தஅம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வீடுகளின் முன்பு பெண்கள் அதிகாலையில், மாக்கோலமிட்டு மார்கழி மாத பிறப்பை வரவேற்றனர். காரைக்குடி பகுதியில், மார்கழி மாதத்தையொட்டி வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிட்டனர்.