பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
பழநி : உலக நலன், அமைதி, செழுமை வேண்டி பழநி கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. பழநி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி மூன்று கும்பங்கள் வைத்து மூலமந்திர ஹோமம் நடந்தது. பெரியநாயகியம்மன், சோமாஸ்கந்தர், சிவன், நடராஜர், முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சோடஷ அபிஷேகம் என்னும் 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. உபயதாரர் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, ஹோட்டல் கண்பத் உரிமையாளர் செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, மனித உரிமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரியாவுடையார் கோயில்: சண்முகநதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள ஸ்தலமாகும். அன்னாபிஷேகத்தையொட்டி சங்கல்பம், மூன்று கும்பங்கள் வைத்து பூஜை நடந்தது. கும்பங்கள் உட்பிரகாரம் சுற்றி வந்து மூலவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, நடராஜருக்கு சிரசு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மஹா அபிஷேகமும் நடந்தது. கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உபயமாக அன்னாபிஷேகம் நடந்தது. கந்தவிலாஸ் செல்வக்குமார், ஜெகதீசன், பாஸ்கரன், நகராட்சி தலைவர் வேலுமணி, வருத்தமில் லா வாலிபர் சங்க நிர்வாககமிட்டி தலைவர் ரத்தினம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மதனம், நிர்வாகி தேரடி பாலு பங்கேற்றனர்.