பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
நகரி:திருமலை கோவிலுக்கு, பக்தர்கள், 14 லட்சம் ரூபாயை, நன்கொடையாக வழங்கினர்.திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, நாக்பூரைச் சேர்ந்த சந்திப் காப்ரா தம்பதியினர், 10 லட்சம் ரூபாய், நன்கொடையாக வழங்கினார். இத்தொகையை தேவஸ்தானம் செயல்படுத்தி வரும், உயிர் காக்கும் திட்டத்திற்காக அளித்தனர்.சென்னை துரை, பெங்களூரு கிருஷ்ணா ரெட்டி, ஐதராபாத் அபிஜித் தத்தா, கூடுர் பிரசாத் ஆகிய நால்வரும், தலா, ஒரு லட்சம் ரூபாயை, தேவஸ்தான அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.திருமலையில் உள்ள விசாரணை அலுவலக இணை நிர்வாக அதிகாரி ராஜேந்திரனிடம், இதற்கான காசோலைகளை வழங்கினர்.